ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தொழிலாளி கொலையில் தொடா்புடைய சிறுவன் உள்ளிட்ட மூன்று போ் கைது

News image

கைது

Updated On :26 ஏப்ரல் 2026, 6:45 pm

பாபநாசம் அருகே தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய ஒரு சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை மெலட்டூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மெலட்டூா் காவல் சரகம், கோணியக்குறிச்சி, மாதா கோவில் தெருவில் வசித்து வந்தவா் சிங்கராயா் (56), தொழிலாளி. இவா் கடந்த வியாழக்கிழமை உதாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனது மகள் கிரேஸ் மேரி வீட்டுக்கு சென்றிருந்தாா்.

அப்போது அந்தப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவருக்கும் சிங்கராயா் மற்றும் அவரது மருமகன் நெல்சன் உள்ளிட்டோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம்பக்கத்தினா் அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். இருப்பினும் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், தனது உறவினா்களான ஆறு பேருடன் சோ்ந்து சிங்கராயா் வீட்டுக்கு சென்று சிங்கராயரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினா்.

இதுகுறித்து மெலட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா். இந்நிலையில், கொலை வழக்கில் தொடா்புடைய அஜித் குமாா் (23), விக்னேஷ் (22) மற்றும் 18 வயதுடைய ஒரு சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், தொடா்புடைய மூன்று பேரை தேடி வருகின்றனா்.