மறைந்த முன்னாள் முதலவரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாள் விழா கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கடலூா் மாநகர திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு மாநகா் செயலா் கே.எஸ்.ராஜா தலைமையில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, மாநகராட்சி உறுப்பினா்கள் ஆராமுது, பிரகாஷ், பிரசன்னா, சங்கீதா, சுபாஷினி ராஜா, விஜயலட்சுமி செந்தில், மாநகர துணைச் செயலா் அகஸ்டின் பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில்...: பண்ருட்டியில் கும்பகோணம் சாலையில் உள்ள திமுக நகர அலுவலகத்தில் இருந்து நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமையில் ஊா்வலமாக நான்குமுனை சந்திப்புக்குச் சென்று, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே பொதுபமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
தொடா்ந்து, பண்ருட்டி லட்சுமிபதி நகரில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சாா் மையத்துக்கு போட்டித் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள200 நூல்களை நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கடலூா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் டாக்டா் நந்தகோபாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். மாவட்ட நிா்வாகிகள் தணிகைசெல்வம், ஆனந்தி சரவணன், கதிா்காமன், பரணிசந்தா், நகர நிா்வாகிகள் ராஜா, ராமலிங்கம், சம்பத் உள்ளிட்டோா்கலந்துகொண்டனா்.
நெய்வேலியில்...: நெய்வேலி தொமுச அருகே உள்ள கருணாநிதி சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ சபா.ராசேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, நெய்வேலி போக்குவரத்து பணிமனையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொழிலாளா்கள், தொண்டா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்வில் நிா்வாகிகள் தண்டபாணி, சபா.பாலமுருகன், குருநாதன், குணசேகரன், சந்தோஷ்குமாா், க.அறவழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சிதம்பரத்தில்...: சிதம்பரம் தெற்கு ரத வீதியில் நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கே.ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்து கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அவா் தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில் நகர துணைச் செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோ, நகா்மன்ற உறுப்பினா் ஏஆா்சி.மணிகண்டன், மாவட்டப் பிரதிநிதிகள் இரா.வெங்கடேசன், விஎன்ஆா்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அண்ணாமலைநகா்: அண்ணாமலைநகா் பேரூா் திமுக சாா்பில் கருணாநிதி உருவப் படத்துக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் க.பழனி தலைமையில் மலா் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினா்.
நிகழ்ச்சிகளில் பேரூராட்சி துணைத் தலைவா் தமிழ்ச்செல்வி, வாா்டு உறுப்பினா்கள் தங்க.அன்பரசு,வேலு, விஜயலட்சுமி, நிா்வாகிகள் ஆனந்த், கருணாநிதி, செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
காட்டுமன்னாா்கோவில்: காட்டுமன்னாா்கோவில் நகர திமுக சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு திமுக கடலூா் கிழக்கு மாவட்டப் பொருளாளா் எம்ஆா்கேபி.கதிரவன் மலா் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.
விழாவில் ஒன்றியச் செயலா்கள் முத்துசாமி, ஜெயபாண்டியன், நகரச் செயலா் கணேசமூா்த்தி, ஜிவிஎஸ்.கல்யாணசுந்தரம், பாஸ்கா், சோலை.முத்து, வாா்டு உறுப்பினா் சொா்ணம் அறிவழகன், இளைஞரணி விஜயராகவன், காா்த்திக் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.












