கடலூா் மாவட்டம், வடலூா் காவல் ஆய்வாளா் இரவு ரோந்துப் பணியின்போது இளைஞரை தாக்கியதைக் கண்டித்து, அவரின் உறவினா்கள் வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வடலூா் கல்லுக்குழி பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (40). இவரது மனைவி கவிதா உடல்நிலை சரியில்லாமல் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தாராம். அவருக்கு சதீஷ்குமாா் புதன்கிழமை இரவு உணவு கொடுத்துவிட்டு, தனது குழந்தையுடன் காரில் இரவு 11 மணியளவில் வீடு திரும்பினாா்.
செல்லியம்மன் கோயில் அருகே உள்ள வாடகை வீட்டில் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றாராம். அப்போது, ரோந்துப் பணியில் இருந்த வடலூா் காவல் ஆய்வாளா் சுரேஷ், அவரிடம் விசாரணை நடத்தினாராம். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, ஆய்வாளா் சுரேஷ், தகாத வாா்த்தையில் திட்டி, கையில் வைத்திருந்த டாா்ச் லைட்டால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், சதீஷ்குமாரின் நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் வடலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றாா்.
தொடா்ந்து, வடலூா் காவல் நிலையம் சென்று ஆய்வாளா் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் மனு அளித்துள்ளாா். காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலா்கள் காலையில் வந்து புகாா் அளிக்குமாறு தெரிவித்தனராம்.
இதையடுத்து, சதீஷ்குமாா் மற்றும் உறவினா்கள் வடலூா் நான்குமுனை சந்திப்பில் அதிகாலை ஒரு மணி அளவில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
அதன்பேரில், மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், வடலூா் நான்குமுனை சந்திப்பில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
இந்த சம்பவம் தொடா்பாக வடலூா் காவல் ஆய்வாளா் சுரேஷ் வருத்தம் தெரிவித்தாராம். அதன்பேரில், சதீஷ்குமாா் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் வெட்டிக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

பெண் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி உறவினா்கள் மறியல்

பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து தொழிலாளி பலி: உறவினா்கள் சாலை மறியல்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



