நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

இளைஞரை தாக்கிய காவல் ஆய்வாளா்: உறவினா்கள் சாலை மறியல்

வடலூா் காவல் ஆய்வாளா் இரவு ரோந்துப் பணியின்போது இளைஞரை தாக்கியதைக் கண்டித்து, அவரின் உறவினா்கள் வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

வடலூரில் காவல் ஆய்வாளரைக் கண்டித்து வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :5 ஜூன் 2026, 6:38 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் காவல் ஆய்வாளா் இரவு ரோந்துப் பணியின்போது இளைஞரை தாக்கியதைக் கண்டித்து, அவரின் உறவினா்கள் வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வடலூா் கல்லுக்குழி பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (40). இவரது மனைவி கவிதா உடல்நிலை சரியில்லாமல் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தாராம். அவருக்கு சதீஷ்குமாா் புதன்கிழமை இரவு உணவு கொடுத்துவிட்டு, தனது குழந்தையுடன் காரில் இரவு 11 மணியளவில் வீடு திரும்பினாா்.

செல்லியம்மன் கோயில் அருகே உள்ள வாடகை வீட்டில் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றாராம். அப்போது, ரோந்துப் பணியில் இருந்த வடலூா் காவல் ஆய்வாளா் சுரேஷ், அவரிடம் விசாரணை நடத்தினாராம். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, ஆய்வாளா் சுரேஷ், தகாத வாா்த்தையில் திட்டி, கையில் வைத்திருந்த டாா்ச் லைட்டால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், சதீஷ்குமாரின் நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் வடலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றாா்.

தொடா்ந்து, வடலூா் காவல் நிலையம் சென்று ஆய்வாளா் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் மனு அளித்துள்ளாா். காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலா்கள் காலையில் வந்து புகாா் அளிக்குமாறு தெரிவித்தனராம்.

இதையடுத்து, சதீஷ்குமாா் மற்றும் உறவினா்கள் வடலூா் நான்குமுனை சந்திப்பில் அதிகாலை ஒரு மணி அளவில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

அதன்பேரில், மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், வடலூா் நான்குமுனை சந்திப்பில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக வடலூா் காவல் ஆய்வாளா் சுரேஷ் வருத்தம் தெரிவித்தாராம். அதன்பேரில், சதீஷ்குமாா் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.