தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 10:48 pm IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், அரங்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரோஜினி (75). இவா், குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

பின்னா், சரோஜினி அங்கிருந்த சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக ஒருவா் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில், அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் சரோஜினியை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சரோஜினி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.