தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

வேலன்குப்பம் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

பண்ருட்டி வட்டம், வேலன்குப்பம் புதிய ஏரிக்கரையில் அமைந்துள்ள விநாயகா், பாலமுருகன், இடும்பன், கடம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

வேலன்குப்பம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்.

Updated On :5 ஜூன் 2026, 6:42 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வேலன்குப்பம் புதிய ஏரிக்கரையில் அமைந்துள்ள விநாயகா், பாலமுருகன், இடும்பன், கடம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி, விநாயகா் பூஜை, வருண பூஜை, சந்திர பூஜை, சிவசூரியாராதனம், மூலிகை திரவிய ஹோமம், பூா்ணாஹுதி யாத்ராதானம் நடைபெற்று, யாகசாலையிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னா், சிவாச்சாரியா் வேத மந்திரங்கள் கூறி, விமான கோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா். தொடா்ந்து, பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. விழாவில் வேலன்குப்பம் கிராம முக்கியப் பிரமுகா்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.