இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

குறிஞ்சிப்பாடியில் வீட்டில் பதுக்கிய சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்

குறிஞ்சிப்பாடியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

குறிஞ்சிப்பாடியில் வட்ட வழங்கல் அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டு உபயோக எரிவாயு உருளைகள்.

Updated On :7 ஜூன் 2026, 2:38 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குறிஞ்சிப்பாடியில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், குறிஞ்சிப்பாடி வட்ட வழங்கல் அலுவலா் செல்வமணி மற்றும் அலுவலா்கள் குறிஞ்சிப்பாடி அக்ரஹாரம் தெருவில் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த பழனிவேல் (75) வீட்டில் அனுமதியின்றி வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து வட்டவழங்கல் அலுவலா் செல்வமணி தலைமையிலான குழுவினா் உபயோகப்படுத்திய 11 எரிவாயு உருளைகள், எரிவாயு நிரப்பப்பட்ட 2 எரிவாயு உருளைகள் என மொத்தம் 13 உருளைகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக பழனிவேல் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.