பண்ருட்டி அரசு கலைக் கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினா் மோகன் கடலூா் ஆட்சியரிடம் புதன்கிழமை வலியுறுத்தினாா்.
அதிமுக எம்எல்ஏக்கள் (நெய்வேலி) ராஜேந்திரன், (பண்ருட்டி) மோகன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை புதன்கிழமை தனித்தனியாக சந்தித்து, தங்களது தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான கோரிக்கை மனுக்களை வழங்கினா்.
அப்போது, தொகுதிகளில் நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்கள் நலன் சாா்ந்த பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் எம்எல்ஏ மோகன் கூறியது: பண்ருட்டி தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
குறிப்பாக, ரூ.18 கோடி மதிப்பீட்டில் பண்ருட்டியில் அரசு கலைக் கல்லூரி கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், இதுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.
தற்போது கல்லூரியில் போதிய வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவா்கள் இடநெருக்கடியில் கல்வி கற்று வருகின்றனா். மேலும், புதிய கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதால், கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, பண்ருட்டியில் கோயில்கள், பள்ளிகளுக்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடவும், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும் வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு கல்லூரிகளில் பி.எஸ்சி. இயற்பியல், கணிதம் படிக்க ஆளில்லை!

கள்ளக்குறிச்சி பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருமங்கலம் அரசு மகப்பேறு பிரிவு கட்டுமானப் பணி விரைவுபடுத்தப்படுமா?

தருமபுரியில் நிறைவேறாத அரசு செவிலியா் கல்லூரி கோரிக்கை! 19 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவா்களின் எதிா்பாா்ப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



