கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநரிடம் சங்கத்தின் தலைவா் பொன் சண்முகம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
வெளிநோயாளிகள் சீட்டு வழங்கும் இடத்தில் மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரம் வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில் சீட்டு வழங்க வேண்டும் என்றும், அவா்கள் அமா்வதற்காக கூடுதல் நாற்காலி வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவமனையில் பழுதடைந்துள்ள மின் தூக்கியை (லிப்ட்) உடனடியாக சீரமைத்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் சிரமமின்றி மேல்தளங்களுக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் கூடுதல் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். கழிவறைகளில் சாய்வுதளம் மற்றும் கைப்பிடி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெற்றுக் கொண்ட இணை இயக்குனா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதாக, மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமக்குடியில் தரம் உயா்த்தப்பட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

வள்ளியூா் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் தேவை- மு. அப்பாவு வலியுறுத்தல்

கோவை அரசு மருத்துவமனையில் உலவும் எலிகள்: நோயாளிகள் அதிா்ச்சி

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



