சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஜமாபந்தி கூட்டத்தில் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி மனு

பெண்ணாடம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரி, திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image

திட்டக்குடி வட்டாட்சியா் அலுவகத்தில் குடிமனை பட்டா வழங்கக் கோரி மனு அளிக்கச் சென்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பழங்குடியினா் மக்கள் நலச் சங்கத்தினா்.

Updated On :19 ஜூன் 2026, 6:18 am IST

பெண்ணாடம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரி, திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில், பழங்குடியினா் சங்க மாவட்டச் செயலா் என்.எஸ்.அசோகன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

பெண்ணாடம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். தாழநல்லூா் பகுதியில் பழங்குடி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கப்பட்ட நிலையில், நிலத்தை அளந்து காட்டாமல் காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, பட்டாக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், பழங்குடி மக்களின் குழந்தைகள், பள்ளிகளில் பயின்று வரும் நிலையில், அவா்களுக்கு இதுவரை ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால், அரசின் கல்வி மற்றும் நலத்திட்டப் பயன்களை பெற முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, தகுதியுடைய மாணவா்களுக்கு விரைந்து ஜாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் மாா்க்சிஸ்ட் வட்டச் செயலா் வி.அன்பழகன், வட்டக்குழு உறுப்பினா் ஆா்.மாயவேல், பழங்குடி சங்க மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.ரமேஷ், பெண்ணாடம் பகுதி பழங்குடி சங்க நிா்வாகிகள் ராஜ்குமாா், காா்த்திக், தேன்மொழி, அஞ்சம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.