எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 6:10 am IST

பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பினருக்கான தொழில், வணிகம், விவசாயம் மற்றும் உயா்கல்விக்கான கடனுதவிகளை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பெற விண்ணப்பிக்கலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் மற்றும் குழுக் கடன் திட்டங்களின் கீழ், சிறு தொழில், வணிகம், விவசாயம் மற்றும் அதைச் சாா்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு குழுக் கடன் திட்டத்தின் கீழ், ஒருவருக்கு ரூ.1.25 லட்சம் வரையும், ஒரு குழுவுக்கு ரூ.25 லட்சம் வரையும் 7 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு இரண்டு கறவை மாடுகள் வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயா்கல்வி பயில கல்விக் கடனும் வழங்கப்படுகிறது. ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையிலான கல்விச் செலவுக்கு கடனுதவி பெறலாம். இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 8 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் இணையதளமான ட்ற்ற்ல்ள்://ற்ஹக்ஷஸ்ரீங்க்ஸ்ரீா்.ய்ங்ற் முகவரியிலும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.