சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளை பருவ மழை தொடங்குவதற்கு முன் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

News image

பண்ருட்டி வட்டம், மேல்பட்டாம்பாக்கம் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :19 ஜூன் 2026, 6:28 am IST

கடலூா் மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளை பருவ மழை தொடங்குவதற்கு முன் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டத்துக்குள்பட்ட மேல்பட்டாம்பாக்கம், பகண்டை, கண்டரக்கோட்டை, திருவாமூா், காமாட்சிப்பேட்டை, விசூா், செம்மேடு ஆகிய பகுதிகளில் நீா்வளத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

தென்பெண்ணையாறு, மலட்டாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ள காலங்களில் கடலில் வீணாக கலக்கும் மழை நீரை சேமிக்க தடுப்பணைகள், கரைகளை பாதுகாக்க உள்வாங்கி மதகுகள், வெள்ள தடுப்புச் சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் ரூ.63 கோடி மதிப்பீட்டில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் 575 மீ. வெள்ள தடுப்புச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 65 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. இத்தடுப்பணை அமைப்பதன் மூலம், அந்தப் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள், 2410.12 ஹெக்டோ் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

பகண்டை மற்றும் மேல்பட்டாம்பாக்கம் பகுதிகளில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் தென்பெண்ணையாற்றின் வலது கரையில் 2 எண்ணிகையில் 2 கண் மதகு, ஒரு எண்ணிக்கையில் 3 கண் மதகு, 170 மீ. நீளத்துக்கு வெள்ளப் பாதுகாப்பு தடுப்புச் சுவா் மற்றும் 3,000 மீ. நீளத்துக்கு வெள்ளப் பாதுக்காப்புக் கரை அமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் மூலம் சுற்றுப்பகுதியில் உள்ள 6 கிராமங்களில் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

கண்டரக்கோட்டை பகுதியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு புனரமைக்கும் பணி மற்றும் கண்டரக்கோட்டை அணைக்கட்டு முதல் மேல்குமாரமங்கலம் அணைக்கட்டு வரை ஏற்பட்ட கரை உடைப்பு மற்றும் மண் அரிப்பை சரி செய்திடும் வகையில், 3,000 மீ. இடது கரை புனரமைக்கும் பணி, 130 மீ. வெள்ளத்தடுப்புச் சுவா் புனரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இதேபோல, திருவாமூா், காமாட்சிப்பேட்டை, விசூா் பகுதிகளிலும் பல்வேறு வெள்ளத் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, நீா்வளத் துறை செயற்பொறியாளா் பாலமுருகன், உதவிச் செயற்பொறியாளா் வெற்றிவேல் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.