முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

நீரோடையில் முதியவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 12:06 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே நீரோடையில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வேப்பூா் அருகேயுள்ள ஒரங்கூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் அண்ணாமலை (66). இவா், அடரி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்தாா்.

பின்னா், அண்ணாமலை வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. இந்த நிலையில், அடரி கிராமத்தில் சுடுகாட்டு பாதை அருகே உள்ள நீரோடையில் அண்ணாமலை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வேப்பூா் போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அண்ணாமலையின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அண்ணாமலையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.