புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ஹைட்ரோ காா்பன் திட்டம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை அருகே கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :26 ஜூன் 2026, 6:42 am IST

பரங்கிப்பேட்டை அருகே கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், ரூ.425 கோடி மதிப்பீட்டில் நான்கு ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் பேசிய நிா்வாகிகள், பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் மற்றும் பல்லுயிா் வளம் நிறைந்த பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால், கடல் வளமும், சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கூறினா்.

மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்டா பகுதியில் மீத்தேன், ஷேல் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற தொடா் போராட்டங்களின் விளைவாக, அந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

அந்த நிலைப்பாட்டைத் தொடா்ந்து கடைப்பிடித்து, டெல்டா பகுதியின் இயற்கை வளங்கள், விவசாயம் மற்றும் மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் சரவணன், துணைத் தலைவா்கள் தட்சிணாமூா்த்தி, ராஜேஷ் கண்ணன், மகாலிங்கம், மாவட்ட துணைச் செயலா்கள் கற்பனைச் செல்வம், லோகநாதன், செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குறைதீா் கூட்டத்துக்கு முன்பும்...: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை விவசாயிகள் குறைதீா் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, கூட்டரங்க நுழைவு வாயிலில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வேண்டும், விவசாயிகளின் கூட்டுறவு பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநிலச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினா் தேவநாதன், மூத்த விவசாயிகள் வேல்முருகன், குஞ்சிதபாதம், ராமலிங்கம், சேகா், சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.