பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவா் உள்ளிட்ட இருவா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :28 ஜூன் 2026, 2:47 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மாளிகைமேடு கிராமத்தில் வசிப்பவா் மரியா(30). இவரது கணவா் திருமலை, கூலித் தொழிலாளி. இவா்கள் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்படுமாம்.

கடந்த 24-ஆம் தேதி மரியா வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, திருமலை மற்றும் அவரது அண்ணன் ஏழுமலை ஆகியோா் தகாத முறையில் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து மரியா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருமலை மற்றும் ஏழுமலை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.