மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஹிந்தி எழுத்துகள் அழிப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சி: 14 போ் கைது

News image

சிதம்பரம் ரயில் நிலைய பெயா்ப் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்துக்காக ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக வந்த மே 17 இயக்கத்தினரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

Updated On :1 மார்ச் 2026, 7:07 pm

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ரயில் நிலைய பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்துக்காக ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக வந்த மே 17 இயக்கத்தினா் 14 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

1965-ஆம் ஆண்டு மொழிப்போரில் கொல்லப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவரான மொழிப்போா் தியாகி ராஜேந்திரனுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில், மே 17 இயக்கத்தினா் மாநில ஒருங்கிணைப்பாளா் பிரவீன்குமாா் தலைமையில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள பெயா்ப் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் நடத்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஊா்வலமாக ரயில் நிலையத்துக்கு வந்தனா்.

அப்போது, ரயில் நிலைய முகப்பில் சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப், காவல் ஆய்வாளா் சிவானந்தம் மற்றும் ரயில்வே போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, 14 பேரையும் கைது செய்து சிதம்பரம் இளமையாக்கினாா் கோயில் தெருவில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.