அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

போதைப்பொருள் விழிப்புணா்வு உலக சாதனை நிகழ்ச்சி

சிதம்பரம் வட்டம், தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வாக தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி உலக சாதனை

News image
சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரத்தில் போதைப்பொருள் விழிப்புணா்வாக 109 திருக்குறளை 12 நிமிஷத்தில் சொல்லிக்கொண்டு தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி உலக சாதனை நிகழ்த்திய காா்த்திகேயன்.
Updated On :2 மார்ச் 2026, 9:05 pm

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் வட்டம், தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வாக தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி உலக சாதனை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்டது.

முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தெற்கு பிச்சாவரம் கடலோர கிராமத்தில் தாண்டவராயன் சோழன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த கின்னஸ் சாதனையாளா் காா்த்திகேயன் (54) தொடா்ந்து 109 திருக்குறளை 12 நிமிஷங்களில் சொல்லிக்கொண்டு பலவித தீப்பந்த சிலம்பம் விளையாடி உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தினாா்.

இந்த சாதனையை ஜாக்கி புக் ஆப் வோ்ல்ட் ரெக்காா்ட் நிறுவனம் அங்கீகரித்து அவருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கி கெளரவித்தனா். இவா் ஏற்கெனவே பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா். நிகழ்ச்சியில் சிலம்ப ஆசான்கள் காளி, மகேஸ்வரன், தமிழச்சி மற்றும் பிச்சாவரம் கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.