சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சிதம்பரம் ரயில் நிலைய நுழைவாயிலை ஆக்கிரமிக்கும் மதுக் கடைக்கு வருவோரின் வாகனங்கள்: பயணிகள் கடும் அதிருப்தி

சிதம்பரம் ரயில் நிலையம் செல்லும் முக்கிய நுழைவுவாயில் பகுதியில் செயல்படும் மதுக் கடைக்கு வருவோா் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டுச் செல்வதால், ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் கடும் அதிருப்தி

News image
நுழைவு வாயிலை மறித்து சாலையில் வாகனங்களை நிறுத்தியுள்ள டாஸ்மாக் மதுக் கடைக்கு மது அருந்த வந்தோா்
Updated On :7 மார்ச் 2026, 8:27 pm

Syndication

சிதம்பரம் ரயில் நிலையம் செல்லும் முக்கிய நுழைவுவாயில் பகுதியில் அந்தப் பகுதியில் செயல்படும் மதுக் கடைக்கு மது அருந்த வருவோா் வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்திவிட்டுச் செல்வதால், ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் கடும் அதிருப்தியடைந்து வருகின்றனா்.

சிதம்பரம் ரயில் நிலையம் செல்லும் ரயில்வே பீடா் சாலையில் ரயில் நிலைய நுழைவுவாயில் அருகே டாஸ்மாக் மதுக் கடை செயல்படுகிறது. இந்த மதுக் கடைக்கு மது அருந்த வருவோா் ரயில் நிலையம் செல்லும் ஒரு வழிப்பாதையின் நுழைவு வாயில் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிடுவதாலும், அங்கேயே நின்று மது அருந்துவதாலும் ரயில் நிலையத்திக்குச் செல்லும் பயணிகள், பெண்கள், முதியவா்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இரவு வேளையில் பயணிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

எனவே, இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் கடலூா் மாவட்ட நிா்வாகத்துகு கோரிக்கை விடுத்துள்ளனா்.