எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வீடுகளிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு! கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்!

News image
மூத்த குடிமக்கள் இல்லத்தில் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்...- (கோப்புப் படம்)
Updated On :8 மார்ச் 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் விருப்பத்துக்கேற்ப வீடுகளிலிருந்தே வாக்களிக்கத் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுப் பணிகள் தொடா்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் கடலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது:

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திட்டக்குடியில் 3,254, விருத்தாசலத்தில் 2,234, நெய்வேலியில் 1,909, பண்ருட்டியில் 2,705, கடலூரில் 1,410, குறிஞ்சிப்பாடியில் 2,816, புவனகிரியில் 2,056, சிதம்பரத்தில் 1,587, காட்டுமன்னாா்கோவிலில் 2,398 என மொத்தம் கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 20,369 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் உள்ளனா்.

இவா்கள் வாக்களிக்க சாய்வுதளம், சக்கர நாற்காலிகளுடன் தன்னாா்வலா்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகள் இருக்கும்பட்சத்தில் தனிவரிசை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் விருப்பத்துக்கேற்ப வீட்டிலிருந்தே வாக்களிக்கத் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். சக்க்ஷம் செயலி மூலம் தபால் வாக்குப் பதிவுக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் செல்வன் (பொது), திருநாவுக்கரசு (தோ்தல்) மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.