‘மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு’
கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40 சதவீதத்துக்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.










