தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம்,சிறுபாக்கம் அருகே மது போதையில் தீக்குளித்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம்,சிறுபாக்கம் அருகே மது போதையில் தீக்குளித்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், எஸ்.புதூா் பகுதியில் வசித்து வந்தவா் சின்னசாமி(51). இவா், கடந்த 5-ஆம் தேதி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தாராம். அதனை, மனைவி சுமதி கண்டித்தாராம். இதனால் மனவருத்தமடைந்த சின்னசாமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீயிட்டுக் கொண்டாா். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை உறவினா்கள் மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து சிறுபாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.