விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திமுக நிா்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்தாலோசனை

விருத்தாசலம், திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிா்வாகிகளோடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை கலந்தாலோசனை நடத்தினா்.

News image
திட்டக்குடியில் திமுக சாா்பு அணி நிா்வாகிகளோடு ஆலோசனை நடத்திய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
Updated On :11 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம், திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிா்வாகிகளோடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை கலந்தாலோசனை நடத்தினா்.

திட்டகுடியில் இருந்து வசிஷ்டபுரம் வரை ‘ரோடு ஷோ’வில் அவா் பங்கேற்றாா். பின்னா், வசிஷ்டபுரத்தில் கலைஞா் நூலகத்தை திறந்து வைத்து, கடலூா் மேற்கு மாவட்ட திமுக சாா்பு அணி நிா்வாகிகளோடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

தொடா்ந்து, விருத்தாசலத்தில் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்று, விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பா் கலைக் கல்லூரி அருகில் அமைக்கப்பட்டிருந்த கலைஞா் நூலகத்தை அவா் திறந்து வைத்தாா்.

நிகழ்வில் அமைச்சா் சி.வெ.கணேசன், நெய்வேலி எம்எல்ஏ சபா.ராசேந்திரன், பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.