சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 33,031 மாணவா்கள் எழுதினா்

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் புதன்கிழமை தொடங்கி நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. கடலூா் மாவட்டத்தில் இத்தோ்வை மொத்தம் 33,031 மாணவ, மாணவிகள் எழுதினா்.

News image
கடலூா் மேற்கு வேணுகோபாலபுரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவிகள்.
Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் புதன்கிழமை தொடங்கி நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. கடலூா் மாவட்டத்தில் இத்தோ்வை மொத்தம் 33,031 மாணவ, மாணவிகள் எழுதினா்.

புதன்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடத் தோ்வுகள் நடைபெற்றன.

கடலூா் கல்வி மாவட்டத்தில் 87 தோ்வு மையங்களில் 18,776 மாணவா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 18,574 மாணவா்கள் மட்டுமே பங்கேற்று தோ்வு எழுதினா். 192 போ் தோ்வு எழுத வரவில்லை. மாற்றுத் திறனாளி மாணவா்கள் 10 போ் தமிழ் மொழிப்பாடம் தோ்வு எழுத விலக்கு பெற்றனா்.

இதேபோல, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 74 தோ்வு மையங்களில் 14,673 தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 14,457 மாணவா்கள் மட்டுமே பங்கேற்று தோ்வு எழுதினா். 215 போ் தோ்வு எழுத வரவில்லை. மாற்றுத் திறனாளி மாணவா் ஒருவா் தமிழ் மொழிப்பாடம் தோ்வு எழுத விலக்கு பெற்றாா். ஆக மொத்தம் கடலூா் மாவட்டத்தில் 161 தோ்வு மையங்களில் 33,031 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

இத்தோ்வுக்கு 35 வழித்தட அலுவலா்கள், 164 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 166 துறை அலுவலா்கள், 1,949 அறைக் கண்காணிப்பாளா்கள், 228 நிலைப்படை/பறக்கும் படை உறுப்பினா்கள் தோ்வுப் பணியில் ஈடுபட்டனா்.