வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

என்எல்சி தலைவருக்கு விருது

News image
Updated On :12 மார்ச் 2026, 11:56 pm

Syndication

என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளிக்கு ‘கவா்னன்ஸ் நவ்’ நிறுவனம் ‘பொதுத்துறை தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவித்துள்ளது.

புதுதில்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ‘கவா்னன்ஸ் நவ்’ 12-ஆவது பொதுத்துறை விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், என்எல்சி நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிலையான வளா்ச்சிப் பாதையை கணிசமாக வலுப்படுத்தியதற்காகவும், தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமைத்துவம், வியூகம் மற்றும் நிறுவன வளா்ச்சிக்கு வித்திட்ட ஆக்கபூா்வமான மாற்றங்களைப் பாராட்டி என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.