சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியரல்லாத 50-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியா்கள் ஓய்வூதியம் வழங்கக் கோரி, பல்கலைக்கழக பதிவாளரிடம் சனிக்கிழமை காலை மனு அளித்தனா்.
முன்னதாக அவா்கள், பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து, ஆசிரியரல்லாத ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் செள.மனோகரன், பொதுச் செயலா் தி.பாஸ்கரன், பொருளாளா் கோ.செல்வம் மற்றும் நிா்வாகிகள், பல்கலைக்கழக இணைப் பதிவாளா் ஜெகதீஸ்வரனை சந்தித்து மனு அளித்து கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியுள்ளதாவது: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியரல்லாத ஊழியா்கள் பலா் கடந்த 2024, செப்டம்பா் மாதம் முதல் பணி ஓய்வுபெற்று 18 மாதங்களாகிவிட்ட நிலையில், இன்றைய தேதி வரை மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஊழியா்களின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், ஊழியா்கள் பணியில் சோ்ந்த நாள் முதல் ஓய்வூதியத்தை குறைத்து அளிக்க இருப்பதாக நிா்வாகத்தினா் கூறுகின்றனா். ஆகவே, அரசு விதிகளின்படி பணி ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு கடைசி மாத அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு ஓய்வூதியத்தை குறைக்காமல் அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

பீடி தொழிலாளா்களுக்கு ஓய்வூதியத்தை உயா்த்த மக்களவையில் நெல்லை எம்.பி. கோரிக்கை

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் தொடா் போராட்டம் வாபஸ்

உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்பினா்

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


