கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பேரரசன்(20). இவா், அதேபகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது பள்ளி மாணவியை காதலிக்குமாறு தொடா்ந்து வற்புறுத்தி வந்துள்ளாா்.
கடந்த 11-ஆம் தேதி மாணவி வீட்டிற்குச் சென்று காதலிக்கச் சொல்லி தொந்தரவு செய்து தாக்கினாராம். மீண்டும் அன்று இரவு 8 மணிஅளவில் மது அருந்தி வந்து மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து மாணவியின் தாய் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் பேரரசனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


