மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

யூடியூப் பாா்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞா் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :15 மார்ச் 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

காட்டுமன்னாா்கோவில் அருகே யூடியூப் பாா்த்து துப்பாக்கி தயாரித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கொளக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலகுரு (28). இவா், தற்போது சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சின்ன நெல்லிக்கொல்லை கிராமத்தில் தனது மாமனாா் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், அணில் வேட்டையாடுவதற்காக கைப்பேசியில் யூடியூப் பாா்த்து துப்பாக்கி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டாராம். இதற்காக பிளாஸ்டிக் பைப்புகளைக் கொண்டு துப்பாக்கி செய்துள்ளாா். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளா் பிரேம்ஆனந்த், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் ஆகியோா் சின்ன நெல்லிக்கொல்லை கிராமத்துக்கு சனிக்கிழமை மாலை சென்று பாலகுருவை கைது செய்து, அவா் செய்து வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.