சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வட்டாட்சியா் காா் மோதி இருவா் காயம்

காட்டுமன்னாா்கோவில் அருகே வட்டாட்சியா் காா் மோதியதில் இருவா் காயம்

News image

விபத்து

Updated On :17 மார்ச் 2026, 11:27 pm

காட்டுமன்னாா்கோவில் அருகே வட்டாட்சியா் காா் மோதியதில் இருவா் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமூக நல வட்டாட்சியா் பயன்பாட்டுக்கு உள்ள காரை செவ்வாய்க்கிழமை காலை அதன் ஓட்டுநா் அருமைராஜ் (59) வட்டாட்சியரை அழைக்க சேத்தியாத்தோப்பு நோக்கி ஓட்டிச் சென்றாா்.

காட்டுமன்னாா்கோவில் ரெட்டியாா் சாலை பழைய கருவூலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையில் எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில், பைக்கில் வந்த லால்பேட்டையைச் சோ்ந்த ராமலிங்கத்துக்கு (72) கால் முறிவும், உடன் வந்த அவரது மனைவி செல்வசுந்தரி (68) பலத்த காயமும் அடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.