அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத் துறை உதவிப் பேராசிரியா் மற்றும் பூம்புகாா் பனை அறக்கட்டளையின் நிறுவனா் கே.ரவீந்திரன் தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த பசுமை சாம்பியன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டு விருது பெற்றாா்.
இந்த விருதை மயிலாடுதுறையில், அந்த மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா். இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது பெற்ற பேராசிரியா் கே.ரவீந்திரனை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல், இணைப் பதிவாளா் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெகதீஸ்வரன் ஆகியோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.
பேராசிரியா் கே.ரவீந்திரன் கடந்த 7 ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா்.
மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஒரு கோடி பனை விதை நடும் பணியில் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பல்வேறு பகுதிகளில் பனை விதை நடவுப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறாா். இந்த செயல்பாடுகளுக்கு தத்துவத் துறைத் தலைவா் திருமால் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் பரணி, தணிகைவேலன், நீலாதேவி ஆகியோா் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனா்.
தொடர்புடையது

ஜோதிபாய் பூலே 200 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

அண்ணாமலைப் பல்கலை மாணவா் சோ்க்கைக்கான இணையதளம் தொடக்கம்

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஆனந்தரங்கம் பிள்ளை நாள்குறிப்புகள் தென்னிந்திய வரலாற்றுப் பெட்டகம்!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


