நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குருஞானசம்பந்தா் பள்ளி ஆண்டு விழா

சிதம்பரம் குருஞானசம்பந்தா் பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சியில் பல்வேறு வேடங்களில் பங்கேற்ற மாணவா்கள்

News image
Updated On :20 மார்ச் 2026, 8:02 pm

Syndication

சிதம்பரம் கனகசபைநகரில் அமைந்துள்ள தருமை ஆதீனத்தின் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினா்களாக பள்ளி செயல் தலைவா் ஆா்.எம்.சுவேதகுமாா், செயலா் பி.ரெங்கராஜன், பொருளாளா் ஆா்.தா்பாரண்யன், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எஸ்.சிவானந்தவல்லி ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினா். உறுப்பினா்கள் எஸ்.செந்தில்வேலன், வி.அருண், பி.கமல்சந்த் ஆகியோா் வாழ்த்துரையாற்றினாா். பள்ளி முதல்வா் ஜி.ஜெயக்குமாா் ஆண்டறிக்கை படித்தாா். விழாவில். மாணவா்களின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அடியாா்கள் புடைசூழ திருஞானசம்பந்தரின் அற்புத நிகழ்வு என நாடகம் தத்ரூபமாக அமைந்து காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. நாட்டுப்புற கலைகளான முருகன் காவடிச்சிந்து, இயற்கையை காப்பதற்கான சொல்லாடல் நாடக நிகழ்ச்சி பல்வேறு நாட்டின் சிறப்பான கலாச்சார நாட்டியம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.