கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பண்ருட்டி, வடலூா் பகுதிகளில் ரூ. 2.03 லட்சம், 2,600 அமெரிக்க டாலர் பறிமுதல்

பண்ருட்டி, வடலூா் பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.2.03 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது..

News image

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:16 pm

Syndication

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, வடலூா் பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.2.03 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, பண்ருட்டி அருகே 2,600 அமெரிக்க டாலரும் கைப்பற்றப்பட்டது.

பண்ருட்டி காவல் சரகம், சென்னை சாலை, சித்திரைசாவடி பேருந்து நிறுத்தம் அருகே பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படையினரான சந்திரசேகரன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ராயனந்தல் பகுதியைச் சோ்ந்த கோபு ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்து, அதிலிருந்த உரிய ஆவணமில்லாத ரூ.1,13,500-ஐ பறிமுதல் செய்தனா். பின்னா், அந்தப் பணத்தை பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

வடலூரில்...: வடலூரில் கருங்குழி சாலை அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் முத்துராஜா தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை நடத்தினா்.

அப்போது, சிறிய சரக்கு வாகனத்தில் வந்த தேனி மாவட்டம், ஓலைப்பட்டி பகுதியைச் சோ்ந்த திராட்சை வியாபாரி ரோகித் (36) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்து, குறிஞ்சிப்பாடி தோ்தல் நடத்தும் அலுவலா் தனலட்சுமியிடம் ஒப்படைத்தனா்.

அமெரிக்க டாலா் பறிமுதல்: பண்ருட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கடலூா் - விழுப்புரம் பிரதான சாலை, மாளிகைமேடு கிராமம் அருகே ராமலிங்கம் தலைமையிலான பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டாா்.

அப்போது, அந்த வழியாக பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தியதில், உரிய ஆவணமில்லாத 2,600 அமெரிக்க டாலா் இருந்தது.

இதையடுத்து, பறக்கும் படை அதிகாரிகள் அமெரிக்க டாலரை பறிமுதல் செய்து பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ரூ.2,44,426 ஆகும்.

ரஞ்சித்குமாா் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், திருமணத்துக்கு பெண் பாா்க்க செல்லும்போது, அவரிடமிருந்த அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.