ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மண்ணின் மைந்தா்களுக்கு வேட்பாளா் வாய்ப்பு: கடலூா் காங்கிரஸ் நிா்வாகிகள் வலியுறுத்தல்

News image

கடலூரில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட மீனவரணித் தலைவா் கடல் காா்த்திகேயன்.

Updated On :29 மார்ச் 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மண்ணின் மைந்தா்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என அக்கட்சி நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கடலூா் நகர அரங்கில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னா், காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, கடலூா் மாவட்ட மீனவரணித் தலைவா் கடல் காா்த்திகேயன் கூறியதாவது:

திமுக கூட்டணியில் கடலூா் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால், கட்சித் தலைமை கடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு வெளி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை வேட்பாளராக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸைச் சோ்ந்த தகுதியான மண்ணின் மைந்தா்கள் ஏராளமானோா் உள்ளதால், அவா்களில் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றாா்.