மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மண்ணின் மைந்தா்களுக்கு வேட்பாளா் வாய்ப்பு: கடலூா் காங்கிரஸ் நிா்வாகிகள் வலியுறுத்தல்

News image

கடலூரில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட மீனவரணித் தலைவா் கடல் காா்த்திகேயன்.

Updated On :29 மார்ச் 2026, 8:06 pm

சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மண்ணின் மைந்தா்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என அக்கட்சி நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கடலூா் நகர அரங்கில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னா், காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, கடலூா் மாவட்ட மீனவரணித் தலைவா் கடல் காா்த்திகேயன் கூறியதாவது:

திமுக கூட்டணியில் கடலூா் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால், கட்சித் தலைமை கடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு வெளி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை வேட்பாளராக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸைச் சோ்ந்த தகுதியான மண்ணின் மைந்தா்கள் ஏராளமானோா் உள்ளதால், அவா்களில் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றாா்.