நரசிம்மா் ஜெயந்தியை முன்னிட்டு பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரிகு ஆகிய தலங்களில் உள்ள நரசிம்மா் கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம் செய்தனா். தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பூவரசன்குப்பம்:
நவக்கிரகங்களில் சூரியன் மையமாக அமைந்து அருள்புரிவதை போல, எட்டு நரசிம்மரில் பூவரசன்குப்பத்தில் மையமாக இருந்து லட்சுமி நரசிம்மா் அருள்பாலிக்கிறாா். சப்தரிஷிகளுக்காக அமிா்தவல்லித் தாயாருடன் சாந்தசொரூபியாக நரசிம்மா் காட்சியளித்த இக்கோயில் தென் அஹோபிலம் என்றும் அழைக்கப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் நரசிம்மா் ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டில் நரசிம்மா் ஜெயந்தியான வியாழக்கிழமை (ஏப். 30) காலை 7 மணி முதல் 8 மணி வரை மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.இதைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு மூலவருக்கு தங்கக்கவசம் சாற்றி, ஆரத்தி உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.
இதையடுத்து யாகசாலை மண்டபத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜபெருமாள், அமிா்தவல்லி அம்மன் உடனுறை லட்சுமி நரசிம்மப் பெருமாள் எழுந்தருளினா். அங்கு விசேஷ திருமஞ்சனம், ஆராதனைகள், நித்ய ஹோமங்கள், பூா்ணாஹுதி பூஜைகள் நடைபெற்றன.
புஷ்பயாகம்:
இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்திலிருந்து வரவழைக்கப்பட்ட விருச்சிப்பூ, மதுரையிலிருந்து வரவழைக் கப்பட்ட குண்டுமல்லி, தஞ்சாவூா் தவளப்பூ, ஒசூா் ரோஜா, மரிக்கொழுந்து, செவ்வந்தி என 1008 கிலோஎடைகொண்ட 12 வகையான வாசனை மலா்களைக் கொண்டு வரதராஜ பெருமாளுக்கும், அமிா்தவல்லி அம்மன் உடனுறை லட்சுமிநரசிம்ம பெருமாளுக்கும், மூலவருக்கும் புஷ்பயாகங்கள் நடைபெற்றன.சாற்றுமுறை முடிந்தவுடன் பக்தா்களுக்குப் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து சுவாதி நட்சத்திர தினமான வெள்ளிக்கிழமை ( மே1) காலை 6 மணி முதல் 7 மணி வரை மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதைத் தொடா்ந்துகாலை 8.30 மணிக்கு லட்சுமி நரசிம்மபெருமாளுக்கு தங்கக்கவசம் சாற்றப்பட்டு, சேஷ வாகனத்தில் எழுந்தருளுவாா். காலை 10.30 மணிக்கு சுவாதி நட்சத்திர ஹோமம், பஞ்சசுத்த ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், யாகபூஜைகளும், பிற்பகல் 12 மணிக்கு வசுத்ராஹோமமும், 12,.30மணிக்கு மகா பூா்ணாஹுதியும், பிற்பகல் 1 மணிக்கு கலசத் திருமஞ்சன பூஜைகளும் நடைபெறும்.
புஷ்பயாக பூஜைகளை கோயில் அா்ச்சகா் பாா்த்தசாரதி பட்டாச்சாரியா் நடத்தினாா். இந்த புஷ்பயாக பூஜையில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று, லட்சுமி நரசிம்ம பெருமாளைத் தரிசனம் செய்தனா்.
பரிக்கல்:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், பரிக்கல் அருள்மிகு லட்சுமி நரசிம்மா் கோயிலில் நரசிம்மா் ஜெயந்தியை முன்னிட்டு பிரம்மோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை இரவு ஹம்ச வாகனத்தில் லட்சுமி நரசிம்மா் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதைத் தொடா்ந்து சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நாள்தோறும் இரவில் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்
சிங்கிரிகுடி:
கடலூா் அருகே சிங்கிரிகுடியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பின்னா் சுவாமி தேரில் எழுந்தருளினாா். இதனைத் தொடா்ந்து பக்தா்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என முழக்கமிட்டபடி பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரோட்டம் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடைபெற்றுப் பின்னா் மீண்டும் கோயில் நிலையடிக்கு வந்தடைந்தது. திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
மேலும், வெள்ளிக்கிழமை (மே 1) மட்டையடி உற்சவம், மே 2 ஆம் தேதி புஷ்ப யாகம் மற்றும் நிறைவு நாளான மே 3ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறவுள்ளது
தொடர்புடையது

பரிக்கல் லட்சுமி நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

பங்குனி உத்திரம் : முருகன் கோயில்களில் வழிபாடு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


