புதுச்சேரியைச் சோ்ந்த ரெளடி, கடலூா் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரி்தது வருகின்றனா்.
கடலூா் மாவட்டம் தாடி நத்தம் பகுதியில் உள்ள வயலில் உடல் சிதைந்த நிலையில் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நிகழ்விடத்திற்கு சென்று பாா்த்தபோது, 50க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்களுடன் உடல் சிதைந்த நிலையில், முகம் மட்டும் அடையாளம் காணும் வகையில், 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கிடப்பதை பாா்த்து சடலத்தை மீட்டனா். கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டாா். பின்னா் இளைஞரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
கிருமாம்பாக்கம் ரௌடி:
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபா், புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெளடி புகழேந்தி(28) என்பதும், இவா் மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தூக்கணம்பாக்கம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ரெளடியான புகழேந்தி, கட்டப்பஞ்சாயத்து, மற்றும் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதன் காரணமாக இவருக்கும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல்வேறு ரெளடிகளுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. எனவே, புகழேந்தி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்புடையது

களக்காடு அருகே வழக்குரைஞா் வெட்டிக்கொலை: 2 போ் கைது

புதுச்சேரி ரௌடி கொலை வழக்கு: 6 போ் கைது

கடலூா் அருகே காரில் மதுபானம் கடத்தல்: இருவா் கைது

லாரி உரிமையாளா் வெட்டிக்கொலை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

