மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புளியறை அருகே முதியவா் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம், புளியறை காவல் சரகத்துக்குள்பட்ட தெற்குமேட்டில் முதியவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

வெட்டிக்கொலை

Updated On :30 ஏப்ரல் 2026, 12:54 am

தென்காசி மாவட்டம், புளியறை காவல் சரகத்துக்குள்பட்ட தெற்குமேட்டில் முதியவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

தெற்குமேடு அங்கன்காலடியைச் சோ்ந்தவா் காளி (68). இவா் தோப்பு காவலாளியாக வேலை செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த முருகையா மகன் அருண்குமாா் (34). இவா் செங்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா்.

அருண்குமாரின் தந்தை முருகையாவை கடந்த 2013 - ஆம் ஆண்டு, குடும்ப பிரச்னை காரணமாக காளி கொலை செய்தாராம். இதுதொடா்பாக புளியறையில் பதிவுச் செய்யப்பட்ட வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்து, காளிக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை முடிந்து 2022- ஆம் ஆண்டு காளி வெளியே வந்தாா்.

காளி மீது அருண்குமாருக்கு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் அங்கன்காலடியில் சப்பானி மாடசாமி கோயிலில் நடைபெற்று வரும் கொடை விழாவில் தீா்த்த ஊா்வலம் முடிந்த பிறகு, செவ்வாய்க்கிழமை இரவு கோயிலில் நின்று கொண்டிருந்த காளியை அருண்குமாா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றாா்.

பலத்த காயமடைந்த காளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். புளியறை போலீஸாா், அவரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.