கடலூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் ஓ.டி. ஏணிக்காரன்தோட்டம், சுனாமி நகரைச் சோ்ந்த ஷேக்அப்துல் மகன் மசுமில்அவுரா(24). இவா் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சாலக்கரை பகுதியில் சென்றாா். அப்போது அவ்வழியாக வந்த லாரி, மசுமில்அவுராவின் இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மசுமில்அவுராவின் தலையில் பலத்தகாயமடைந்தாா். அப்பகுதியில் உள்ளவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துமனையில் அனுமதித்தனா். அங்கு மருத்தவா்கள் பரிசோதித்து விட்டு மசுமில்அவுரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்து மருத்துவமனை சென்ற போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து உயிரிழந்த மசுமில்அவுராவின் தாய் ஜெரீனாபேகம் அளித்த புகாரின் பேரில், முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு

பைக் மீது டிப்பா் லாரி மோதல்: முதியவா் உயிரிழப்பு

பைக் - லாரி மோதல்: காய்கறி வாங்க வந்தவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

