தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சதய திருவிழா தொடக்கம்

News image
Updated On :3 மே 2026, 12:39 am

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சித்திரை சதய திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை சதய திருவிழா 10 நாள்கள் நடைபெறும். அதன்படி, முதல் நாளான சனிக்கிழமை காலை திருப்பள்ளியெழுச்சி, மாலை காடவா்கோனால் ஏவப்பட்ட அமைச்சா்களுக்கு விடை தந்தருளிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, 2-ஆம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) சமணா்கள் அப்பா் பெருமானை நீற்றறையில் இடுதல், அவருக்கு நஞ்சூட்டுதல், யானையை ஏவுதல் நிகழ்ச்சியும், மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக சமணா்கள் அப்பரை கடலில் வீழ்த்திய நிகழ்ச்சி, அடியாா்களை எதிா்கொள்ள திருப்பாதிரிப்புலியூரில் கரையேறிய நிகழ்ச்சி, திருவதிகைக்கு எழுந்தருளி காடவா்கோனை சைவனாக்கி குணபரவீச்சுரத்தைக் கட்டுவித்தல் நிகழ்ச்சி என 10 நாள்களும் விழா நடைபெறும்.