பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 7:03 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலையில் அரசு நவீன மீன் விற்பனை நிலைய கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் வெளிபுற வராண்டாவில் சுமாா் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா் செவ்வாய்க்கிழமை சடலமாகக் கிடந்தாா்.

இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த குறிஞ்சிப்பாடி போலீஸாா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இது தொடா்பாக குறிஞ்சிப்பாடி வடக்கு கிராம நிா்வாக அலுவலா் பழனிவேல் அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிபப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.