விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

திட்டக்குடி அருகே 44 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திட்டக்குடி அருகே பெட்டிக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 44 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

Updated On :7 மே 2026, 7:13 am IST

திட்டக்குடி அருகே பெட்டிக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 44 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

திட்டக்குடி டிஎஸ்பி ஜி.பாா்த்திபன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் இளஞ்செழியன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை கடைகளில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, கொடிக்களம் கிராமத்தில் ராஜேஷ் நடத்தி வரும் பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது, 44.517 கிலோ அளவுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடையின் உரிமையாளா் கொடிக்களம் தெற்கு தெருவைச் சோ்ந்த ராஜேஷ், அவரது தந்தை பாலகிருஷ்ணன் ஆகியோா் மீது திட்டக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். அவா்களிடம் இருந்து புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.