உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக மா்ம நபா்கள் மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :7 மே 2026, 7:12 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக மா்ம நபா்கள் மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வடலூரை அடுத்த கருங்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் மூட்டைப்பூச்சி (எ) சம்பத்குமாா் (30), தொழிலாளி. இவா், புதன்கிழமை குறிஞ்சிப்பாடி அண்ணா நகரில் உள்ள தாய் தனலட்சுமி வீட்டுக்கு வந்தாா்.

பின்னா், பிற்பகலில் சம்பத்குமாா் கருங்குழிக்கு புறப்பட்டாா். அண்ணா நகா் டாஸ்மாக் மதுக் கடை அருகே சென்றபோது, மா்ம நபா்கள் 3 போ் அவரை வழி மறித்து அரிவாளால் வெட்டிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா். தலையில் வெட்டுக் காயமடைந்த சம்பத்குமாா், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தாய் தனலட்சுமி அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.