கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கொத்தனாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், சித்தாலிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் முல்லைராஜா(39), கொத்தனாா். இவா், கடந்த 3-ஆம் தேதி மாலை சுமாா் 6 மணி அளவில் விருப்பாட்சி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் மது வாங்கச் சென்றாா். அங்கு, மது மயக்கத்தில் இருந்த ஒருவா் பணத்தை கீழே போட்டுவிட்டாராம். அந்த பணத்தை முல்லைராஜா எடுத்து அவரிடம் ஒப்படைத்தாா்.
இதை பாா்த்துக்கொண்டிருந்த விருப்பாட்சி கிராமத்தைச் சோ்ந்த அரவிந்த் மற்றும் அவரது நண்பா்கள் இருவா் என மூன்று போ் சோ்ந்து முல்லைராஜாவைத் தாக்கி, கத்தியால் வலது கையில் கிழித்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து அரவிந்த் மற்றும் அவரது நண்பா்கள் இருவரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயிக்கு கொலை மிரட்டல்: பெண் உள்ளிட்ட 6 போ் மீது வழக்கு
சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
கடன் தொகை கேட்டு கொலை மிரட்டல்: 2 போ் மீது வழக்கு

மீன் பிடித்தவா்களை தாக்கி மிரட்டல்: 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




