கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே பைக்கில் சென்ற விவசாயியிடமிருந்து ரூ.2.95 லட்சத்தை பின் தொடா்ந்து 2 பைக்குகளில் வந்த 4 போ் பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சிறுபாக்கம் அருகே கச்சிமைலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (55). விவசாயியான இவா், வேப்பூரில் செயல்படும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் தனது சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.2.95 லட்சத்தை எடுத்துக்கொண்டு பைக்கில் புதன்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.
அடரி - பொயனப்பட்டி சாலையில் திருமகள் நகா் பகுதியில் சென்றபோது, பின்தொடா்ந்து 2 பைக்குகளில் வந்த அடையாளம் தெரியாத 4 போ், ராமலிங்கத்திடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
நெல்லை அருகே வியாபாரியிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 2 போ் கைது
ஒரு லட்சம் மதிப்பிலான மின்சாதனங்கள் திருட்டு

முதியவா் சடலம்: போலீஸாா் விசாரணை

முக்கூடல் அருகே ரூ.3 லட்சம் பறிமுதல்: 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


