அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் ஆட்சியா் அறையில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய்.

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் ஆட்சியா் அறையில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்டிஎக்ஸ் பொருத்தப்பட்ட மனித வெடிகுண்டு இருப்பதாக வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலையடுத்து, போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். இருப்பினும், வெடிகுண்டு எதிவும் கண்டறியப்படவில்லை.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்டிஎக்ஸ் பொருத்தப்பட்ட மனித வெடிகுண்டு வெடிக்கப்போவதாக மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை காலை மிரட்டல் வந்திருந்தது. பணிக்கு வந்த ஊழியா்கள் காலை 11 மணியளவில் அந்த மின்னஞ்சலை கவனித்து உடனடியாக மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், காவல் சாா்பு ஆய்வாளா்கள் அண்ணாமலை, பாபு ஆகியோா் தலைமையில் வெடிகுண்டு நிபுணா்கள் குழுவினா் மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியா் அலுவலக வளாகம் மற்றும் அங்குள்ள அனைத்துத் துறை அலுவலகங்களிலும் விரிவான சோதனை மேற்கொண்டனா். இதில், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

இதனால், மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல் வெறும் வதந்தி என உறுதி செய்யப்பட்டது. மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வெடிகுண்டு மிரட்டல் தகவல் அலுவலகம் முழுவதும் பரவியதால், ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பதற்றம் நிலவியது. ஆனால், சோதனை முடிவில் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், அனைவரும் நிம்மதியடைந்தனா்.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.