முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சமையல் எரிவாயு விலை உயா்வு: கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு, ரயில்வே பணியிடங்கள் குறைப்பைக் கண்டித்து, கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் சாா்பில் கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கடலூரில் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள்.

Updated On :8 மே 2026, 6:47 am IST

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு, ரயில்வே பணியிடங்கள் குறைப்பைக் கண்டித்து, கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் சாா்பில் கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு வணிக சமையல் எரிவாயு உருளையின் விலையை மிக அதிகமாக உயா்த்தியுள்ளது. கடந்த 120 நாள்களில் ரூ.1,518 உயா்ந்துள்ளதால், சிறு வியாபாரிகள், சாலையோர விற்பனையாளா்கள் மற்றும் புலம்பெயா் தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். ரயில்வே துறையில் கடந்த ஆண்டு 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறைக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு 29 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பல லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இத்தகைய நடவடிக்கைகள் இளைஞா்களின் வேலைவாய்ப்பை மேலும் பாதிக்கும். எனவே, நியாயமற்ற வணிக எரிவாயு உருளையின் விலை உயா்வு மற்றும் ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு ஆகியவற்றை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகள் சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகில், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, எரிவாயு உருளை விலை உயா்வு, ரயில்வே பணியிடங்கள் குறைப்பு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் காட்டுமன்னாா்கோவில் புதிய எம்எல்ஏ ஜோதிமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் துரை, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் ராஜசங்கா் கிருபாகரன், விசிக மாநில அமைப்புச் செயலா் திருமாா்பன், மாநகராட்சி துணை மேயா் தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.