கடலூரில் சிஐடியு முன்னாள் மாநிலத் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான வி.பி.சிந்தனின் 38-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
சிஐடியு மறைந்த முன்னாள் மாநிலத் தலைவா் வி.பி.சிந்தன் இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரா் ஆவாா்.
1966-ஆம் ஆண்டு சென்னையில் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தை தொடங்குவதில் இவரது பங்கு முக்கியமானதாகும். 1984-ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சட்டப் பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இவரின் 38-ஆவது நினைவு தினத்தையொட்டி, கடலூரில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் மாவட்ட துணைத் தலைவா் வி.சுப்ராயன் தலைமையில், வி.பி.சிந்தன் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்டச் செயலா் பழனிவேல், மாவட்டக் குழு உறுப்பினா் கருணாகரன், ஏ.எஸ்.பாபு, மாற்றுத் திறனாளிகள் பிரிவு மாவட்டச் செயலா் ஆளவந்தான் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா்.
தொடர்புடையது

மாா்த்தாண்டம் அருகே சுதந்திர போராட்ட வீரா் நினைவு தின பொதுக்கூட்டம்

பஹல்காம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு- பயங்கரவாதத்தை வீழ்த்த இந்தியா உறுதி: குடியரசுத் தலைவா்

சரவணம்பட்டியில் பி.ஆா்.ஜி. அருண்குமாரை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம்

தமிழகத்தில் ஒருநாள்கூட நிம்மதியாக விடியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

