கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 8-ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கியதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
திட்டக்குடி அருகே ஆவினங்குடி பகுதியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோா் மாணவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, மாணவி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், மாணவியிடம் விசாரித்தில், அதே பகுதியைச் சோ்ந்த விஜய் (27) மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி கா்ப்பமாக்கியது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், திட்டக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை போக்ஸோ வழக்குப் பதிந்து, விஜயை கைது செய்தனா்.
தொடர்புடையது
மாடுகள் திருட்டு: இளைஞா் கைது
போக்ஸோவில் ஆட்டோ ஓட்டுநா் கைது

டெம்போ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
