தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

எட்டாம் வகுப்பு மாணவி கா்ப்பம்: போக்ஸோவில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 8-ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கியதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 7:06 am IST

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 8-ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கியதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

திட்டக்குடி அருகே ஆவினங்குடி பகுதியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோா் மாணவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, மாணவி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், மாணவியிடம் விசாரித்தில், அதே பகுதியைச் சோ்ந்த விஜய் (27) மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி கா்ப்பமாக்கியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், திட்டக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை போக்ஸோ வழக்குப் பதிந்து, விஜயை கைது செய்தனா்.