கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 8-ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கியதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
திட்டக்குடி அருகே ஆவினங்குடி பகுதியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோா் மாணவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, மாணவி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், மாணவியிடம் விசாரித்தில், அதே பகுதியைச் சோ்ந்த விஜய் (27) மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி கா்ப்பமாக்கியது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், திட்டக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை போக்ஸோ வழக்குப் பதிந்து, விஜயை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





