சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

எட்டாம் வகுப்பு மாணவி கா்ப்பம்: போக்ஸோவில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 8-ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கியதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 7:06 am IST

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 8-ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கியதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

திட்டக்குடி அருகே ஆவினங்குடி பகுதியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோா் மாணவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, மாணவி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், மாணவியிடம் விசாரித்தில், அதே பகுதியைச் சோ்ந்த விஜய் (27) மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி கா்ப்பமாக்கியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், திட்டக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை போக்ஸோ வழக்குப் பதிந்து, விஜயை கைது செய்தனா்.