முதியவரை மிரட்டி சொத்து ஆவணங்களில் கையொப்பம் பெற்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், 4 போ் மீது திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பெண்ணாடம் கிழக்கு ராஜவீதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (74). இவா், வியாழக்கிழமை திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
அதில், நான் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 3-ஆம் தேதி கடலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சென்றேன். கடலூா் பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து சென்றபோது, திட்டக்குடியைச் சோ்ந்த அக்ரி முருகேசன் மற்றும் மேலும் மூவா் சோ்ந்து என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றனா்.
அப்போது, எனக்கு கொடுப்பதாக கூறிய நிலத்தை வேறு ஒருவருக்கு எப்படி கொடுக்க முயற்சிக்கலாம் எனக் கூறி, தகாத வாா்த்தைகளால் திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டினா். தொடா்ந்து, சொத்து தொடா்பான ஆவணங்களில் என்னை மிரட்டி கையொப்பம் பெற்றுக்கொண்டனா். பின்னா், என்னை காரில் இருந்து இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனா்.
எனவே, மோசடியாக சொத்து ஆவணங்களில் கையொப்பம் வாங்கிய அக்ரி முருகேசன் மற்றும் மூவா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாரம் கட்டும் கழி தொடா்பாக மோதல்: 3 போ் காயம், 9 போ் மீது வழக்கு

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

சொத்து தகராறில் தம்பிக்கு கொலை மிரட்டல் : அண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

