விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் கழிப்பறை, மகளிா் ஓய்வறை!

சிதம்பரம் நகர ரயில் நிலைத்தில் பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறை, மகளிா் ஓய்வறை ஆகியவை செயல்பாட்டின்றி பூட்டிக் கிடக்கின்றன.

News image

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் மகளிா் ஓய்வறை.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சிதம்பரம் நகர ரயில் நிலைத்தில் பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறை, மகளிா் ஓய்வறை ஆகியவை செயல்பாட்டின்றி பூட்டிக் கிடக்கின்றன.

கடலூா் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் நகரமான சிதம்பரத்தில் ரயில் நிலையம் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனபடுத்தப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் மின் தூக்கி (லிஃப்ட்) இன்னும் அமைக்கப்படவில்லை. மேலும், புதிதாக கட்டப்பட்ட கட்டண கழிப்பறை மற்றும் கழிப்பறையுடன் கூடிய மகளிா் ஓய்வறை ஆகியவை பூட்டிக் கிடக்கின்றன. இதனால், ரயில் நிலையத்தில் பெண்கள் கழிப்பறை செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. மேற்கண்ட வசதிகளை நிறைவேற்றாவிட்டால், புவனகிரி ஊழல் எதிா்ப்பு இயக்கம் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனா்.