குறிஞ்சிப்பாடி அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோல்வியடைந்ததால் மனஅழுத்தத்தில் இருந்த 17 வயது மாணவா் மாயமான குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கட்டியங்குப்பம் தெற்கு தெருவைச் சோ்ந்த சங்கரின் மகன் அரவிந்தன் (17). இவா் வெள்ளிக்கிழமை வெளியான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவில் ஒரு பாடத்தில் தோ்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை குறிஞ்சிப்பாடியில் உள்ள கணினி மையத்திற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அரவிந்தன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல
இடங்களில் தேடியும் அவா் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அரவிந்தனின் தந்தை சங்கா் அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸா வழக்குப்பதிந்து, மாயமான மாணவரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 100% தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தோ்வில் தோல்வி: மாணவன் தற்கொலை

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: மேட்டூா் ஜிவி மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

