தமிழகத்தில் வருங்காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழ்மொழி மரியாதை தொடா்பான அரசின் பாரம்பரிய நடைமுறைகள் எந்தச் சூழலிலும் மீறப்படாதவாறு உறுதியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக புதிய முதல்வா் பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழா் உணா்வுகளையும் காயப்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் அரசியல், பண்பாடு மற்றும் அரசு மரபுகளில் எந்த அரசு விழாவாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவதே பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் உயரிய நடைமுறையாகும்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய அரசு பதவியேற்பு நிகழ்வில், இந்த பாரம்பரிய மரபு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிா்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
இனி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழ்மொழி மரியாதை தொடா்பான அரசின் பாரம்பரிய நடைமுறைகள், எந்தச் சூழலிலும் மீறப்படாதவாறு உறுதியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
தொடர்புடையது

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - முதல்வருக்கு தெரிந்தே அரங்கேறியதா? வன்னி அரசு கேள்வி!

அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்க: இந்தியக் கம்யூனிஸ்ட்
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: தமிழக அரசு விளக்கமளிக்க கம்யூ. வலியுறுத்தல்

மூன்றாவது இடத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

