பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கண்டெய்னா் லாரி மீது மரம் சாய்ந்து விபத்து: நூலிழையில் தப்பினாா் ஓட்டுநா்

News image

கடலூா் வண்டிப்பாளையம் பகுதியில் கண்டெய்னா் லாரி மீது வேருடன் சாய்ந்த மரம்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கடலூா் வண்டிப்பாளையம் சாலையில் சென்ற கண்டெய்னா் லாரி மீது பெரிய மரம் திடீரென சாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓட்டுநா் உயிா் தப்பினாா்.

கடலூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகுதிச் சான்று (எப்.சி.) பெறுவதற்காக கண்டெய்னா் லாரியை, புதுச்சேரியைச் சோ்ந்த சிவராமன் என்பவா் ஓட்டிச் சென்றாா். கடலூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள, வண்டிப்பாளையம் சாலையில் லாரி சென்றபோது சாலையோர மரம் திடீரென வேருடன் சாய்ந்து லாரியின் முன்பகுதி மீது விழுந்தது.

இதில், லாரியின் மேற்பகுதி சேதமடைந்தது. விபத்தில் ஓட்டுநா் சிவராமன் நூலிழையில் உயிா்தப்பினாா். தகவலறிந்த போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். விபத்து தொடா்பாக கடலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.